Paristamil Navigation Paristamil advert login

இலங்கையழல் பிரசவத்தின்போது கீழே வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிசு

இலங்கையழல் பிரசவத்தின்போது கீழே வீழ்ந்து பரிதாபமாக உயிரிழந்த சிசு

14 ஆவணி 2023 திங்கள் 11:02 | பார்வைகள் : 3927


சுகாதாரப் பிரிவின் கவனக்குறைவான மற்றுமொரு சந்தர்ப்பத்தில், மருத்துவ ஊழியர்களின் தவறினால் பிரசவ நேரத்தில் பிரசவ அறையின் தரையில்  வீழ்ந்த சிசு ஒன்று, அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளது.

அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லஞ்சிய என்ற கிராமத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது குழந்தைப் பிரசவத்துக்காக  அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதே  இந்த துயரத்தை சந்தித்துள்ளார்.

பிரசவ நேரத்தில், மருத்துவ ஊழியர்களால் சிசுவைப் பிடிக்க முடியாமல் அது தரையில் வீழ்ந்துவிட்டதாக சிசுவின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை,  பிரேதப் பரிசோதனையில் சிசு கீழே வீழ்ந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.

சிசுவின் சடலம் மேலதிக விசாரணைகளுக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்