Paristamil Navigation Paristamil advert login

நோர்து-டேம் தேவாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது!

நோர்து-டேம் தேவாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தது!

15 சித்திரை 2024 திங்கள் 08:00 | பார்வைகள் : 2424


பாரிய தீ விபத்துக்குள்ளாகி சேதமடைந்த நோர்து-டேம் தேவாலயத்தின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

’ஐந்து ஆண்டுகளில் மீண்டும் நோர்து-டேம் தேவாலயம் புதுப்பிக்கப்படும்!’ என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்திருந்தார். அதன்படி தற்போது அனைத்து திருத்தப்பணிகளும் நிறைவடைந்துள்ளது. வரும் டிசம்பர் 8 ஆம் திகதி (2024) தேவாலயம் திறக்கப்பட உள்ளது. சிறப்பு விருந்தினராக பாப்பரசர் அழைக்கப்பட்டுள்ளார். அவரது வருகை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இந்த திருத்தப்பணிகளுக்காக 250 நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் இடைவிடாது பணிபுரிந்தனர். இந்த திருத்தப்பணிகளுக்காக €846  மில்லியன் யூரோக்கள் சேகரிக்கப்பட்டிருந்தது. ஆனால் திருத்தப்பணிகளுக்காக 550மில்லியன் யூரோக்கள் மட்டுமே செலவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்