வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 31% சதவீதத்தால் அதிகரிப்பு!
.jpeg)
15 சித்திரை 2024 திங்கள் 11:02 | பார்வைகள் : 7809
இந்த மார்ச் மாதத்தில் பிரான்சில் 254 பேர் வீதி விபத்தில் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருட மார்ச் மாதத்தோடு ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 31% சதவீதம் அதிகமாகும்.
2019 ஆம் ஆண்டில் கொவிட் 19 காலத்தின் போது பதிவான எண்ணிக்கையை மீண்டும் பிரான்ஸ் சந்தித்துள்ளது. பிரான்சின் பிரதான நிலப்பரப்பில் மட்டும் இந்த மார்ச் மாதத்தில் மட்டும் 254 பேர் வீதி விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். சென்ற வருட மார்ச் மாதத்தில் 194 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
அதேவேளை, இந்த மார்ச் மாதத்தில் பிரான்சில் கடல்கடந்த நிர்வாகப்பிரிவுகளில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
மேற்படி தகவல்களை பிரான்சுக்காக வீதி பாதுகாப்பு அவதானிப்பாளர்களான l'Observatoire national interministériel de la sécurité routière (ONISR) நிறுவனம் இன்று காலை வெளியிட்டுள்ளது.,
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025