பரிசில் பறக்க உள்ள ரஃபேல் விமானங்கள்!

25 சித்திரை 2024 வியாழன் 10:58 | பார்வைகள் : 9529
ஒலிம்பிக் போட்டிகளுக்கான பரிசோதனை முயற்சியாக நேற்று ஏப்ரல் 24 ஆம் திகதி பரிசில் இரு விமானங்கள் பறக்கவிடப்பட்டிருந்தது. தவிர 15 பரசூட் வீரர்கள் விமானத்தில் இருந்து குதித்திருந்தார்கள். இந்நிலையில், நாளை ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை நான்கு ரஃபேல் போர் விமானங்கள் பரிசை வட்டமடிக்க உள்ளன.
Hôtel National des Invalides பகுதிக்கு மேலாக இந்த நான்கு விமானங்களும் காலை 9.05 மணிக்கு பறக்க உள்ளன. Porte de Vanves இல் ஆரம்பித்து Invalides, Grand Palais, Arc de Triomphe வழியாக Porte Maillot வரை நான்கு விமானங்களும் பறக்க உள்ளன.
ஆனால் இந்த விமான சாகசத்துக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. l’Armistice யுத்த நிறுத்தத்த ஒப்பந்தத்தின் 105 ஆவது ஆண்டு நினைவு நாளை கொண்டாடும் (anniversaire de l’Armistice de 1918) முகமாக இந்த ரஃபேல் போர் விமானங்கள் பரிசில் பறக்க உள்ளன.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025