இராணுவ தளத்திற்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் சீனாவைச் சேர்ந்த நபர்

30 பங்குனி 2024 சனி 12:57 | பார்வைகள் : 12721
அமெரிக்காவில் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், சட்டவிரோதமாக இராணுவத் தளத்திற்குள் நுழைந்ததால் கைது செய்யப்பட்டார்.
பெய்ஜிங் உளவாளிகள் அமெரிக்காவில் உள்ள முக்கிய இடங்களுக்குள் ஊடுருவ முயற்சிக்கிறார்கள் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்க ராணுவ தளங்களில் சீன நாட்டவர்கள் ஊடுருவிய 100க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் உள்ளன.
இந்த நிலையில் சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர், கலிஃபோர்னியாவில் உள்ள இராணுவத் தளத்திற்குள் பதுங்கியிருந்துள்ளார்.
சட்டவிரோதமாக உள்நுழைந்த அவர் வெளியேறும் உத்தரவுகளை புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குறித்த சீனர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து தலைமை ரோந்து முகவர் Gregory Bovino தனது எக்ஸ் பக்கத்தில், ''குறித்த நபர் சட்டவிரோதமாக நாட்டில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அவரது செயல்களுக்குப் பின்னால் உள்ள அவரது நோக்கம் மற்றும் உள்நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருகிறது'' என எழுதியுள்ளார்.
மேலும், சீனப் பிரஜைகள் பெரும்பாலும் 'சேவைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறார்கள்' என்றும், அவர்கள் கண்டுபிடிக்கப்படுவது சீன அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றும் அரசு அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதற்கிடையில் FBI, பாதுகாப்புத்துறை மற்றும் பிற முகமைகள் ஊடுருவல்கள் பற்றி அறிந்திருந்தன மற்றும் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக உச்சிமாநாடுகளை நடத்தியுள்ளன என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
முன்னதாக, தெற்கு கரோலினா கடற்கரையில் பலூன் ஒன்று F-22 ராப்டார் போர் விமானத்தினால் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1