Paristamil Navigation Paristamil advert login

நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த கார் விபத்து! ஐவர் பலி 

 நேபாளத்தில் ஆற்றில் கவிழ்ந்த கார் விபத்து! ஐவர் பலி 

31 பங்குனி 2024 ஞாயிறு 04:50 | பார்வைகள் : 2993


நேபாளத்தின் சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் டாக்சி கவிழ்ந்ததில் 5 பேர் இறந்துள்ளதுடன் ஒருவர் காணாமல் போன சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் உயிரிழந்த 5 பேர்களில் உடல்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர்.

இது குறித்து பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்,

காத்மாண்டுவில் நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு விட்டு டிரைவர் உள்பட 6 பேர் டாக்சியில் இன்று காலை வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

அந்த டாக்சி சித்வான் மாவட்டத்தில் உள்ள திரிசூலி ஆற்றில் விழுந்தது.

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர் காணாமல் போனதால் அந்த நபரை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

உயிரிந்தவர்களில் ஒருவர் டாக்சியின் டிரைவர் என தெரியவந்துள்ளது என்றார்.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்