Paristamil Navigation Paristamil advert login

மகேஷ்பாபு சினிமாவில் இருந்து விலகுகிறாரா?

 மகேஷ்பாபு சினிமாவில் இருந்து விலகுகிறாரா?

31 பங்குனி 2024 ஞாயிறு 11:45 | பார்வைகள் : 2550


மகேஷ் பாபு சினிமாவில் இருந்து தற்காலிகமாக விலக இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது அவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்திற்காக அவர் முழுமையாக மூன்று ஆண்டுகள் ஒதுக்கி இருப்பதாக தெரிகிறது.

இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாகவும் இன்னும் படப்பிடிப்பே தொடங்காத நிலையில் இந்த படத்தின் இரண்டு பாக படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைய 3 ஆண்டுகள் ஆகும் என்றும் அதுவரை அவர் வேறு எந்த படத்தில் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகிறது.

மகேஷ் பாபு திரையுலகில் இருந்து விலகவில்லை என்றாலும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவரது படம் வெளியாக வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போது நிலையாக உள்ளது. மகேஷ் பாபு ரசிகர்கள் இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு அவரை திரையில் பார்க்க முடியாது என்று வருத்தம் அடைந்தாலும் மகேஷ் பாபு - ராஜமவுலியின் படம் அதற்கெல்லாம் சேர்த்து மிகப்பெரிய விருந்தாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் பிரபாஸ் ’பாகுபலி’ படத்தில் 2014இல் கமிட் ஆனார், அந்த படத்தின் இரண்டாவது பாகம் 2017 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகும் வரை அவர் வேறு எந்த படங்களின் ஒப்புக்கொள்ளாமல் இருந்தார். ’பாகுபலி 2’ திரைப்படத்திற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு தான் அவரது ’சாஹோ’ படம் ரிலீஸ் ஆனது என்பதும் எனவே ’பாகுபலி ’யின் முந்தைய படத்திற்கும் ’சாஹோ’ படத்திற்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் இடைவெளி இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்