Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் திருடர் ஒருவருக்கு  காத்திருந்த அதிர்ச்சி

அமெரிக்காவில் திருடர் ஒருவருக்கு  காத்திருந்த அதிர்ச்சி

1 சித்திரை 2024 திங்கள் 11:22 | பார்வைகள் : 9595


அமெரிக்காவில் நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள அல்புகுவெர்க்யூ நகரில் வணிக வளாகத்தில் திருடிவிட்டு தப்பிய நபரை குதிரைப் படை வீரர்கள் விரட்டிச் சென்று கைது செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

களவெடுத்த நபர் பொலிசாருக்கு போக்குகாட்டிய நபர், நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது இதர காவலர்களின் துணையுடன் குதிரையில் சென்ற காவலர், சுற்றிவளைத்து கை விலங்கை மாட்டினார்.

இதன்போது பிடிபட்ட சந்தேக நபரிடம் இருந்து போதைப்பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்