Paristamil Navigation Paristamil advert login

உயிரியல் ஆயுதம்... அணுகுண்டு தாக்குதல்... பாபா வாங்காவின் பகீர் கணிப்பு

உயிரியல் ஆயுதம்... அணுகுண்டு தாக்குதல்... பாபா வாங்காவின் பகீர் கணிப்பு

12 ஆவணி 2023 சனி 10:00 | பார்வைகள் : 2444


பாபா வாங்கா பல்கேரியா நாட்டை சேர்ந்தவர். இவரது 12 வயதில் சூராவளியில் சிக்கி கண்பார்வையை இழந்தார். பார்வை பறிபோனாலும் கடவுள் தனக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தியை வழங்கியுள்ளதாக பாபா வாங்கா கூறி வந்தார். இவர் 1996ம் ஆண்டு தனது 84வது வயதில், காலமானார். 

 உயிரிழப்பதற்கு முன், இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார்.  

இவரது கணிப்புகளில்  85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.  அமெரிக்காவில் உள்ள வர்த்தக கோபுரங்கள் மீதானபயங்கரவாத தாக்குதல், அமெரிக்காவின் 44வது அதிபராக ஒரு கருப்பினத்தவர் பதவி ஏற்பார் என்ற கணிப்பு, 2016ம் ஆண்டு ISIS என்னும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கம் அழிவை ஏற்படுத்தும் என்ற கணிப்பு, ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்து விலகும் என்ற கணிப்பு ஆகியவை உண்மையாகியுள்ளன.

பாபா வெங்கா சுமார் 27 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். ஆனால் உலகத்தில் ஏற்படும் முக்கியமான நிகழ்வுகள் குறித்த அவரது பல கணிப்புகள் இன்றும் மக்களுக்கு பதற்றத்தைத் தருகின்றன. 2023ம் ஆண்டு தொடர்பாக பாபா வாங்கா என்ன கணித்துள்ளார் என்பதை தெரிந்து கொள்வோம்.

1. பாபா வெங்காவின் கணிப்பின்படி, 2023 ஆம் ஆண்டில், ஒரு பெரிய அணுமின் நிலையத்தில் வெடிப்பு ஏற்படலாம். இதன் காரணமாக, ஆசியா கண்டத்தின் வானம் மேகங்களால் மூடப்பட்டிருக்கும். பாபா வெங்காவின் இந்த கணிப்பு இந்தியா உட்பட ஆசியா கண்டத்தில் வாழும் மக்களை தூங்க விடாமல் செய்துள்ளது.

2. பாபா வெங்காவின் கணிப்பின்படி மூன்றாம் உலகப் போர் 2023ல் தொடங்கலாம். இந்த நேரத்தில் உலகின் எந்த நாடும் அணுகுண்டு மூலம் தாக்குதல் நடத்தும் வாய்ப்பும் உள்ளது. இதன் காரணமாக, உலகின் பெரும்பகுதியில் அழிவுகரமான காட்சியைக் காணலாம் என கூறியுள்ளார். 

தற்போது ரஷ்யா - உக்ரைன் போர் நீடித்து வரும் நிலையில், இந்த கணிப்பு உண்மையாகி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகின் பெரும்பாலான நாடுகள் பல இரு நாடுகளுக்கு பின்னர் அணி திரண்டுள்ளன. அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா பல முறை மிரட்டல் விடுத்துள்ளது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

3. 2023 ஆம் ஆண்டைப் பற்றிய பாபா வெங்காவின் கணிப்பின்படி, இந்த ஆண்டு சில பெரிய வானியல் நிகழ்வுகள் நடக்கலாம். இது மட்டுமின்றி இதன் காரணமாக பூமியின் சுற்றுப்பாதையில் மாற்றம் ஏற்படலாம். இது நமது சுற்றுச்சூழலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தும். 

பூமியிலுள்ளவர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். ஏற்கனவே கால நிலை மாற்றத்தினால், மக்கள் கடும் வெப்பம் அனுபவித்து வரும் நிலையில், இந்த கணிப்பு குறித்தும் மக்கள் மத்தியில் கவலை ஏற்பட்டுள்ளது

4. மற்றொரு கணிப்பில், 2023 ஆம் ஆண்டில், விஞ்ஞானிகள் பல விசித்திரமான கண்டுபிடிப்புகளை உருவாக்க முடியும் என்று பாபா வெங்கா கூறினார். இவற்றில் ஒன்று ஆபத்தான உயிரியல் ஆயுதமாகவும் இருக்கலாம். அதை பயன்படுத்தினால் பெரிய அளவில் உலகம் பேரழிவை காணலாம் என கூறப்படுகிறது.

5. பாபா வெங்காவின் 5 வது கணிப்பு என்னவென்றால், 2023 ஆம் ஆண்டு சோகம் மற்றும் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த ஆண்டு பருவமழை பெய்யும். இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்படும். பல பகுதிகளில் கடுமையான புயல்களும் ஏற்படலாம்.

6. பாபா வாங்காவில் கணிப்பில் வேற்று கிரக வாசிகள் இந்தியா வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. பாபா வாங்காவின் இந்த கணிப்புகள் எந்த அளவிற்கு உண்மை என்பது எதிர்காலத்தில் தெரியும். ஆனால், அவரது பழைய கணிப்புகள் பல உண்மையானதை நினைத்து  பலரும் அச்சத்தில் உள்ளனர்.

மேலும் படிக்க | பாகிஸ்தானில் கொடூர ரயில் விபத்து! 30 பேர் பலி! 80க்கு அதிகமானவர்கள் காயம்

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்