Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : நபர் ஒருவரை கட்டிவைத்துவிட்டு வீட்டில் கொள்ளை!

பரிஸ் : நபர் ஒருவரை கட்டிவைத்துவிட்டு வீட்டில் கொள்ளை!

3 சித்திரை 2024 புதன் 15:10 | பார்வைகள் : 4023


வீட்டின் உரிமையாளரை கட்டிவைத்துவிட்டு, €30,000 யூரோக்கள் பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் பரிசில் இடம்பெற்றுள்ளது.

நேற்று ஏப்ரல் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 8 ஆம் வட்டாரத்தின் Boulevard Malesherbes பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் பிற்பகல் 3 மணி அளவில் நுழைந்த முகக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் சிலர் வீட்டின் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரைக் கட்டிவைத்துவிட்டு, விட்டில் இருந்த பணம், நகைகள், ஆடம்பர கடிகாரங்கள், விலையுயர்ந்த தொலைபேசிகள் போன்றவற்றை கொள்ளையிட்டுக்கொண்டு சென்றனர். மொத்தமாக €30,000 மதிப்புள்ள நகை, பணம் கொள்ளையிட்டுக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்