Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் கைதான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

இலங்கையில் கைதான வெளிநாட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்

12 ஆவணி 2023 சனி 13:58 | பார்வைகள் : 3242


சிங்கராஜா வனப்பகுதியில் தாவர மற்றும் விலங்கு பாகங்களை சேகரித்த ஈரானிய பிரஜைகள் மூவருக்கும் 1 கோடியே 32 இலட்சம் ரூபா அபாராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று உடுகம நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அபாரதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மூன்று ஈரானிய பிரஜைகளையும் அழைத்து சென்ற இலங்கை பிரஜைக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது,

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ஈரானிய பிரஜைகளுக்கு எதிராக 44 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்