Paristamil Navigation Paristamil advert login

யாழில் தீடிரென மயங்கி விழுந்தவர் மரணம் - யாழ் எடுத்த விபரீத முடிவு

யாழில் தீடிரென மயங்கி விழுந்தவர் மரணம் - யாழ் எடுத்த விபரீத முடிவு

4 சித்திரை 2024 வியாழன் 10:44 | பார்வைகள் : 1674


யாழ்ப்பாணம் பிரதேசத்தில் நீண்ட காலமாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ள ஊடகவியலாளர்  ஒருவர்  தீடிரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை (03)  இடம்பெற்றுள்ளது  .

 சங்கானை பகுதியை சேர்ந்த 29 வயதுடைய  நடேசு ஜெயபானுஜன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .  

 மகன் உயிரிழந்து விட்டார் என்பதை அறிந்ததும், உயிரிழந்தவரின்  தாயாரும்  தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் வீட்டில் இருந்தவர்களால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . 

மேலும்  குறித்த  இளைஞன் , யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு இயங்கும் ஊடக நிறுவனம் ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் , ஊடகவியலாளராகவும் கடமையாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்