தென்ஆப்பிரிக்காவில் புதிய வரலாறு படைத்த இலங்கை பெண்கள் அணி
4 சித்திரை 2024 வியாழன் 11:42 | பார்வைகள் : 7959
மகளிர் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரை வென்று இலங்கை அணி புதிய வரலாறு படைத்தது.
இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா மகளிர் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி ஈஸ்ட் லண்டனில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 155 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் வோல்வார்ட் 56 (47) ஓட்டங்களும், நாடினே டி கிளெர்க் 44 (25) ஓட்டங்களும் எடுத்தனர்.
இலங்கை அணியின் தரப்பில் சுகந்தா குமாரி 3 விக்கெட்டுகளும், பிரியதர்ஷினி, ப்ரபோதனி மற்றும் கவிஷா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இலங்கை அணி சமரி அதப்பத்து (73), ஹர்ஷிதா சமரவிக்ரமா (54) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால், 19.1 ஓவரில் இலக்கினை எட்டி வெற்றி பெற்றது.
இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி, தென் ஆப்பிரிக்காவில் புதிய வரலாறு படைத்தது.
இந்த வெற்றி குறித்து எக்ஸ் பக்கத்தில், 'தென் ஆப்பிரிக்காவில் எங்கள் மகளிர் அணிக்கு இது ஒரு வரலாற்று முதல் தொடர் வெற்றி! அவர்களின் அசாத்திய சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம்' என இலங்கை கிரிக்கெட் பதிவிட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan