Paristamil Navigation Paristamil advert login

கின்னஸ் உலக சாதனை படைத்த வயதான நபர் மரணம்

கின்னஸ் உலக சாதனை படைத்த வயதான நபர் மரணம்

4 சித்திரை 2024 வியாழன் 13:21 | பார்வைகள் : 2132


2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

1909 ஆம் ஆண்டு மே 27 இல், குடும்பத்தில் 9வது பிள்ளையாக பிறந்த ஜுவான் விசென்டே பெரெஸ், அடுத்த மாதம் தனது 115வது பிறந்தநாளைக் கொண்டாடவிருந்தார்.

2022 பெப்ரவரி 4ஆம் திகதியன்று, கின்னஸ் சாதனையின்படி, பெரெஸ் 112 வயது மற்றும் 253 நாட்களுடன் உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார்.

2022 நிலவரப்படி அவர் 11 பிள்ளைகளின் தந்தையாவார். அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் இருந்தனர் ஐந்தாவது வயதில், அவர் தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் விவசாயத்தில் பணியாற்ற ஆரம்பித்தார்.

அத்துடன்; கரும்பு மற்றும் கோப்பிபி அறுவடைக்கு உதவினார்" என்று 2022 இன் கின்னஸ் அறிக்கை கூறுகிறது.

கடினமாக வேலை செய்தல், விடுமுறை நாட்களில் ஓய்வெடுப்பது, சீக்கிரம் தூங்கச் செல்வது, கடவுளை நேசிப்பது, எப்போதும் அவரைத் தன் இதயத்தில் சுமந்து செல்வது என்பன அவரின் அன்றைய செயல்களாக இருந்தன. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்