Paristamil Navigation Paristamil advert login

Essonne : இருபது தடவைகள் கத்திக்குத்து! - ஒருவர் படுகாயம்!!

Essonne : இருபது தடவைகள் கத்திக்குத்து! -  ஒருவர் படுகாயம்!!

6 சித்திரை 2024 சனி 10:17 | பார்வைகள் : 2905


நேற்று ஏப்ரல் 5, வெள்ளிக்கிழமை இரவு Massy (Essonne) பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இருபது தடவைகள் அவர் கத்திக்குத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

avenue de France பகுதியில் இரவு 10 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றதாகவும், 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்து இரத்தவெள்ளத்தில் கிடந்ததாகவும் சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் தெரிவித்தனர்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு Georges-Pompidou மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். தீவிர சிகிச்சைகள் இடம்பெற்று வருகிறது. 

சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்