Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யா போர் விமானங்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

ரஷ்யா போர் விமானங்கள் மீது ட்ரோன்கள் மூலம் தாக்குதல்

7 சித்திரை 2024 ஞாயிறு 10:28 | பார்வைகள் : 2547


உக்ரைன் - ரஷ்யா போரானது தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில், ரஷ்யாவில் இருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் எல்லைப் பிராந்தியமான ரோஸ்தொவில் அமைந்துள்ள மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் மேலும் 8 விமானங்கள் கணிசமாக சேதமடைந்ததாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ரஷ்ய துருப்புக்கள் கொல்லப்பட்டிருப்பதற்கோ, காயமடைந்திருப்பதற்கோ வாய்ப்புள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மொரொஸோவ்ஸ்க் விமான தளத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்படும் எஸ்யு-27 மற்றும் எஸ்யு-34 ரக விமானங்களை ரஷ்யா நிறுத்தி வைத்துள்ளது.

இருப்பினும், விமானங்கள் அழிக்கப்பட்ட தகவலை ரஷ்யா இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

ரோஸ்தொவ் பிராந்தியத்தைக் குறிவைத்து 40 ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்