Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக கொன்ற கணவன் - அதிர்ச்சி சம்பவம்

7 சித்திரை 2024 ஞாயிறு 10:46 | பார்வைகள் : 3302


பிரித்தானியாவில் கடந்த 2023 மார்ச் மாதம் விதம் நதியில் இருந்து Holly Bramley என்பவரின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டது. 

இந்த வழக்கில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 28 வயதான Nicholas Metson விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்ட நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை தீர்ப்பை எதிர்பார்த்துள்ளார்.

லிங்கன் கிரவுன் நீதிமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், தமது மனைவியின் சடலத்தை ஒருவார காலம் தங்கள் குடியிருப்பிலேயே மறைத்து வைத்திருந்ததும், அதன் பின்னர் நிக்கோலஸ் மெட்சன் தனது நண்பர் Joshua Hancock என்பவருக்கு பணம் கொடுத்து, சடலத்தை மறைவு செய்ததும் வெளிச்சத்துக்கு வந்தது.

விசாரணையின் போது எப்படி, ஏன் தன் மனைவியைக் கொன்றான் என்பதற்கான காரணத்தை மெட்சன் கூறவில்லை என்றே நீதிபதி தெரிவித்துள்ளார். கடந்த 2021ல் பிராம்லி மற்றும் மெட்சன் தமப்தி திருமணம் செய்து கொண்டுள்ளது, ஆனால் மெட்சன் கொலையை நடத்தியபோது பிரியும் தருவாயில் இருந்தனர்.

இந்த நிலையில், 2023 மார்ச் 23 ஆம் திகதி பிராம்லி தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு குடியிருப்பு பொலிசார் சென்றுள்ளனர். 

வீட்டிற்குச் சென்ற அதிகாரிகள், அம்மோனியா மற்றும் ப்ளீச் ஆகியவற்றின் கடுமையான வாசனை, குளியல் தொட்டியில் இரத்தக்கறை மற்றும் சமையலறை தரையில் ஒரு துண்டு ஆகியவற்றைக் கவனித்தனர்.

ஆனால் மெட்சன் தமது மனைவி மீது புகார் அளித்துள்ளதுடன், அவர் தம்மை கொடுமைப்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மெட்சன் கூறியதெல்லாம் பொய் என அதிகாரிகளுக்கு உறுதியானது.

இந்த நிலையில், விதம் நதியில் பிளாஸ்டிக் பைகள் மிதப்பதாக வழிபோக்கர் ஒருவர் பொலிசாருக்கு தெரிவிக்க, சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், மொத்தம் 224 பைகளை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து மெட்சன் கைது செய்யப்பட, தொடக்கத்தில் கொலை செய்யவில்லை என மறுத்து வந்த மெட்சன், பின்னர் கொலையை ஒப்புக்கொண்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்