Paristamil Navigation Paristamil advert login

Seine-et-Marne : சித்திரவதை செய்யப்பட்ட சிறுவன்! - மருத்துவமனையில் அனுமதி!

Seine-et-Marne : சித்திரவதை செய்யப்பட்ட சிறுவன்! - மருத்துவமனையில் அனுமதி!

7 சித்திரை 2024 ஞாயிறு 17:45 | பார்வைகள் : 4710


நேற்று சனிக்கிழமை இரவு தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு வருகை தந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. குறித்த சிறுவன் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக காவ்லதுறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Melun (Seine-et-Marne) நகர மருத்துவமனைக்கு நேற்று சனிக்கிழமை இரவு 11.15 மணி அளவில் குறித்த சிறுவன் வருகை தந்திருந்தார். உடம்பில் பல இடங்களில் தீயினால் எரிக்கப்பட்ட காயங்கள் இருந்துள்ளது. அதையடுத்து மருத்துவமனை தரப்பில் இருந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. Limeil-Brévannes (Val-de-Marne) நகரைச் சேர்ந்த குறித்த சிறுவன் ஒருசிலரால் கடத்தப்பட்டு அறை ஒன்றுக்குள் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

உணவினை சூடாக்கும் chalumeau கருவியினால் அவர் சுடப்பட்டதாகவும், கால், முதுகு உள்ளிட்ட இடங்களில் தீக்காயங்கள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்