Paristamil Navigation Paristamil advert login

போர் நிறுத்தும் வாய்ப்பு இல்லை! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரை

போர் நிறுத்தும் வாய்ப்பு இல்லை! இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரை

8 சித்திரை 2024 திங்கள் 09:23 | பார்வைகள் : 2900


காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவிக்கையில்,

அப்போது அவர், 'வெற்றியில் இருந்து நாம் ஒரு படி தொலைவில் உள்ளோம். 

ஆனால் நாம் செலுத்திய விலை வேதனையானது மற்றும் இதயத்தை உடைக்கிறது.

பணயக் கைதிகள் திரும்பாமல் போர் நிறுத்தம் இருக்காது, அது நடக்காது. 

ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் தயாராக உள்ளது, சரணடைய தயாராக இல்லை. 

நம்மை காயப்படுத்துபவர் அல்லது நம்மை காயப்படுத்த திட்டமிட்டால் - நாங்கள் அவரை காயப்படுத்துவோம்.

இந்த கொள்கையை நாங்கள் எல்லா நேரங்களிலும் மற்றும் சமீபத்திய நாட்களிலும் நடைமுறைப்படுத்துகிறோம்' என தெரிவித்தார்.

மேலும் அவர், இஸ்ரேல் மீது அழுத்தத்தை செலுத்தும் சர்வதேச சமூகம், ஹமாஸ் மீது தனது அழுத்தத்தை செலுத்த வேண்டும். 

அதுவே பணயக்கைதிகளின் விடுதலையை முன்னெடுக்கும் என வலியுறுத்தினார்.

முன்னதாக, ஈரானிய உயர்மட்டத் தளபதிகள் இருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்ட நிலையில், ஈரானிய இராணுவ ஆலோசகர் ஒருவர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்