Paristamil Navigation Paristamil advert login

CSK 50வது வெற்றி! ரசிகர்களுக்கு பந்துகளை பரிசளித்த தோனி

CSK 50வது வெற்றி! ரசிகர்களுக்கு பந்துகளை பரிசளித்த தோனி

13 வைகாசி 2024 திங்கள் 07:30 | பார்வைகள் : 928


சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தியது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய போட்டி சிதம்பரம் மைதானத்தில் நடந்தது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஓட்டங்களை சேர்க்க தடுமாறியது. CSK அணியின் வேகப்பந்து வீச்சாளரின் துல்லியமான பந்துவீச்சில் ஜெய்ஸ்வால் (24), பட்லர் (21) மற்றும் சாம்சன் (15) ஆகியோர் ஆட்டமிழந்தனர். 

ரியான் பராக் 35 பந்துகளில் 47 ஓட்டங்களும், துருவ் ஜுரேல் 18 பந்துகளில் 28 ஓட்டங்களும் விளாச ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 141 ஓட்டங்கள் எடுத்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தரப்பில் சிமர்ஜீத் சிங் 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

பின்னர் ஆடிய சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா 18 பந்துகளில் 27 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார். அடுத்து வந்த மிட்செல் 22 ஓட்டங்களிலும், மொயீன் அலி 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

அதிரடி காட்டிய ஷிவம் தூபேவை 18 (11) ஓட்டங்களில் அஷ்வின் வெளியேற்றினார். எனினும் அணித்தலைவர் கெய்க்வாட் ஆட்டமிழக்காமல் 42 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார்.

இது சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற 50வது வெற்றி ஆகும். போட்டி முடிந்ததும் தோனி மற்றும் CSK வீரர்கள் டென்னிஸ் பந்துகளை ரசிகர்களுக்கு பரிசளித்தனர். 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்