Paristamil Navigation Paristamil advert login

Neuilly-sur-Seine : பெண் மீது கத்திக்குத்து!

Neuilly-sur-Seine : பெண் மீது கத்திக்குத்து!

13 வைகாசி 2024 திங்கள் 17:54 | பார்வைகள் : 2759


பெண் ஒருவர் கத்திக்குத்துக்கு தாக்குதலுக்கு இலக்கான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Neuilly-sur-Seine (Hauts-de-Seine) நகரில் இன்று மே 13 ஆம் திகதி திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Place du Général-Gouraud பகுதியில் வைத்து மாலை 5.30 மணி அளவில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. 43 வயதுடைய பெண் ஒருவர் மூன்று தடவைகள் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Pitié-Salpêtrière மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது 12 வயது மகன் சம்பவ இடத்தில் இருந்ததால் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அவர் Necker மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார். அவர் தேடப்பட்டு வருகிறார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்