Paristamil Navigation Paristamil advert login

Villejuif : துப்பாக்கிச்சூடு.. இருவர் மருத்துவமனையில்..!!

Villejuif  : துப்பாக்கிச்சூடு.. இருவர் மருத்துவமனையில்..!!

15 வைகாசி 2024 புதன் 19:52 | பார்வைகள் : 3850


நேற்று செவ்வாய்க்கிழமை இரவு, துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நிலையில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 Villejuif (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் நேற்று மே 14, செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. நிறைந்த மதுபோதையில், இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்கள் தங்களது இடது பாதத்தில் சுடப்பட்டுள்ளனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், சம்பவம் தொடர்பான துல்லியமான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. சிறிய கலிபர் வகை துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், அப்பிராந்திய காவல்துறையினர் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்