Paristamil Navigation Paristamil advert login

நைஜீரியாவில் மசூதி மீது குண்டுத் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு

நைஜீரியாவில் மசூதி மீது குண்டுத் தாக்குதல் - 6 பேர் உயிரிழப்பு

16 வைகாசி 2024 வியாழன் 16:02 | பார்வைகள் : 2546


நைஜீரியாவில் மசூதி ஒன்றுக்குள் நடத்தப்பட்ட பெற்றோல் குண்டுத் தாக்குதலில் சிறுவா்கள் உட்பட 6 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நைஜீரியாவில் கானோ மாகாணம், கடான் கிராமத்திலுள்ள மசூதியில்  தொழுகையில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில், 4 சிறுவர்கள் உட்பட 24 போ் காமடைந்திருந்த நிலையில், அவர்கள் 6 பேர் 15ஆம் திகதி உயிரிழந்ததாக அந்நாட்டு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலை நடத்திய 38 வயதான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை , இது ஒரு மதப் பிரிவு அடிப்படையிலான நீண்ட கால குடும்பத் தகராறே தாக்குதலுக்குக் காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்