Paristamil Navigation Paristamil advert login

டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய புயல் தாக்குதல்

டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய புயல் தாக்குதல்

17 வைகாசி 2024 வெள்ளி 10:08 | பார்வைகள் : 2186


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டனை தாக்கிய கடுமையான புயல் காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

புயலின் தாக்கத்தால் சுமார் 800,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக நகர மேயர் தெரிவித்தார்.

புயலின் தாக்கத்தால் நகரில் பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும் இடியுடன் கூடிய மழையுடன் மணிக்கு 129 -161 கிமீ வேகத்தில் வீசும் காற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மக்களை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் அரச பாடசாலைகள்  மூடப்படும் என்றும், அத்தியாவசியமற்ற அனைத்து ஊழியர்களையும் அன்றைய தினம் விடுமுறை எடுக்குமாறும் உள்ளூர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்லதாகவும் கூறப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்