Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

IPL 2024ஐ விட்டு வெளியேறிய CSK! ருதுராஜ் கெய்க்வாட் கூறிய காரணம்

IPL 2024ஐ விட்டு வெளியேறிய CSK! ருதுராஜ் கெய்க்வாட் கூறிய காரணம்

19 வைகாசி 2024 ஞாயிறு 09:18 | பார்வைகள் : 6546


நாங்கள் நினைத்த வழியில் ஆட்டம் செல்லவில்லை என RCB அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது குறித்து, சென்னை அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்தார்.

பிளேஆஃப்பை உறுதி செய்யும் நேற்றையப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியிடம் தோல்வியுற்றது. 

இதனால் ரன்ரேட் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. போட்டிக்கு பின்னர் பேசிய CSK அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட்,

''சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தோம், அது ஒன்று அல்லது இரண்டு வெற்றிகளின் விடயம், சில சமயங்களில் அது டி20 ஆட்டத்தில் நிகழலாம். சீசனை சுருக்கமாகக் கூறினால், 14 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

கடைசி இரண்டு பந்துகளில் எல்லையைத் தாண்ட முடியவில்லை. காயங்களால் இரண்டு முன்னணி பந்துவீச்சாளர்களைத் தவறவிட்டோம். மூன்று முக்கிய வீரர்களைத் தவறவிட்டது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று நினைக்கிறேன்.

CSK ஊழியர்கள் மற்றும் சீசன் முழுவதும் எங்களுக்காக ஒரு சிறந்த நிகழ்ச்சியை வழங்கிய அனைவருக்கும் நன்றி. முதல் ஆட்டத்தில் எங்களுக்கு பல சவால்கள் இருந்தன'' என தெரிவித்தார்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்