யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதி பலி - பிறந்த நாளில் நடந்த சோகம்

20 வைகாசி 2024 திங்கள் 06:21 | பார்வைகள் : 9917
யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார்.
புத்தூர் வாதரவத்தையை சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன் சாருஜா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் பால் எடுத்து சென்ற வேளை , புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்திக்கு அருகில் இராணுவ வாகனம் மோதியதில் யுவதி படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்த யுவதியை அங்கிருந்தவர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை யுவதி உயிரிழந்துள்ளார்.
யுவதியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த யுவதியின் பிறந்தநாள் இன்றாகும் (திங்கட்கிழமை 20) என்பதும் குறிப்பிடத்தக்கது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3