Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

22 ஆவணி 2023 செவ்வாய் 11:28 | பார்வைகள் : 3746


அமெரிக்காவின் சியாட்டில் நகரில் உள்ள ஹூக்கா லவுஞ்சில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் ரெய்னியர் ஹூக்கா லவுஞ்சில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை சியாட்டில் காவல் துறையை மேற்கோள்காட்டி சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இச்சம்பவத்தில் இரண்டு ஆண்களும் ஒரு பெண்ணும் சுட்டுக் கொல்லப்பட்டதை பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளதாக சியாட்டில் காவல்துறைத் தலைவர் அட்ரியன் டயஸ் ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

22 மற்றும் 32 வயதுடைய இருவர் படுகாயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

30 வயதுடைய பெண் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை மாலை நிலவரப்படி, நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் சீரான நிலையில் உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டுள்ளது.

23 வயதான ஒரு நபர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சியாட்டில் தீயணைப்புத் தலைவர் ஹெரால்ட் ஸ்கோகின்ஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் திணைக்களத்தின் கொலைவெறி பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு என்ன காரணம் அல்லது எத்தனை சந்தேக நபர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்