வயதாகிவிட்டது என சலுகை தர மாட்டார்கள்! ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

22 வைகாசி 2024 புதன் 08:09 | பார்வைகள் : 4248
சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம்.எஸ்.தோனி ஐபிஎல் கிரிக்கெட்டில் ஓய்வு குறித்து மனம் திறந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியுற்றது தோனி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.
காரணம் என்னவென்றால் 42 வயதாகும் தோனிக்கு இதுதான் கடைசி தொடராக இருக்கும் என்ற கூற்று நிலவுவது தான். ஆனால் ஓய்வுக்குறித்து தோனி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எனினும் அவர் கிரிக்கெட் வாழ்க்கை கூறுகையில், ''மிகக்கடினமான விடயம் என்னவென்றால்...ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவதில்லை.
அதனால் நான் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும்.
நான் வந்தவுடன் சர்வதேச கிரிக்கெட்டில் Fit ஆக இருக்கும் இளைஞர்களுக்கு எதிராக போட்டியிட வேண்டும்.
தொழில்முறை விளையாட்டு எளிதானது அல்ல, யாரும் உங்களது வயதுக்கு சலுகை தருவதில்லை.
நீங்கள் விளையாட விரும்பினால், நீங்கள் மற்ற வீரரைப் போலவே பொருத்தமாக இருக்க வேண்டும்.
வயது உண்மையில் அந்த அருளை உங்களுக்கு வழங்காது.
அதனால் உணவுப்பழக்கம், கொஞ்சம் பயிற்சி என்று எல்லாமே இருக்கிறது.
சமூக ஊடகங்கள், அதிர்ஷ்டவசமாக நான் சமூக ஊடகங்களில் இல்லை, அதனால் கவனச்சிதறல் குறைவாக உள்ளது'' என தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025