Paristamil Navigation Paristamil advert login

 காசாவில் மசூதி மீது ஏவுகணை தாக்குதல் ...! 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

 காசாவில் மசூதி மீது ஏவுகணை தாக்குதல் ...! 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

24 வைகாசி 2024 வெள்ளி 05:32 | பார்வைகள் : 1450


காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடாத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலின் போது 16 பேர் பரிதாபமாக உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும் நிலையில் பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் உள்ள மசூதியை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. 

காசா முனையின் மேற்கு கரையில் எகிப்து எல்லையோரம் அமைந்துள்ள அல்-சக்ரா மசூதியில் ஹமாஸ் அமைப்பினர் பதுங்கி இருந்து சதி தீட்டி வருவதாக இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் அந்த மசூதியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்களை அனுப்பியும் சரமாரி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 16 பேர் கொல்லப்பட்டதாக அரபு நாட்டில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்