பேருந்தைக் கொளுத்திய ரசிகர்கள்.. 20 பேர் காயம்..!

26 வைகாசி 2024 ஞாயிறு 07:07 | பார்வைகள் : 12363
நேற்று சனிக்கிழமை மாலை பரிஸ் - லியோன் கழகங்களுக்கிடையே Coupe de France இறுதிப் போட்டி இடம்பெற்றது. இந்த போட்டிக்கு சற்று முன்னதாக இரு அணிகளின் ரசிகர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
பா-து-கலேயில் இருந்து ரசிகர்களுடன் போட்டியைக் காண இரு பேருந்துகள் புறப்பட்டிருந்தன. அதன்போதே லியோன்-பரிஸ் ரசிகர்களிடையே மோதல் வெடித்தது. Fresnes-lès-Montauban பகுதியில் A1 நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்துகள் இரண்டும் கொளுத்தப்பட்டது.
இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களோடு மோதலை தடுக்க வந்த CRS காவல்துறையினர் மூவரும் காயமடைந்துள்ளனர்.
பத்து பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025