Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி 7 யானைக் குட்டிகள் உயிரிழப்பு

இலங்கையில் வெள்ளத்தில் சிக்கி 7 யானைக் குட்டிகள் உயிரிழப்பு

27 வைகாசி 2024 திங்கள் 06:38 | பார்வைகள் : 834


கொழும்பிலிருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திம்புலாகல பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் யானைகள் சிக்கியதாக நம்பப்படுகிறது.

தண்ணீரில் 3 குட்டிகள் மூழ்கியதாக வட்டாரவாசிகள் வன அதிகாரிகளிடம் கூறியிருந்தனர்.

சம்பவ இடத்தில் மேலும் 4 குட்டிகள் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். குட்டிகளின் சடலங்கள் மீது பிரேதப் பரிசோதனை நடத்தப்படும்.

இலங்கையில் கடந்த நூற்றாண்டில் யானைகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.

அப்போது 12,000 யானைகள்  நாட்டில் இருந்தன. எண்ணிக்கை இப்போது 7,000க்குக் குறைந்துள்ளது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்