Paristamil Navigation Paristamil advert login

தோல்விக்கு பின் Sunrisers வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்...

தோல்விக்கு பின் Sunrisers வீரர்களுக்கு ஆறுதல் கூறிய காவ்யா மாறன்...

28 வைகாசி 2024 செவ்வாய் 08:38 | பார்வைகள் : 370


இறுதிப் போட்டியில் தோற்ற பிறகு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் டிரஸ்ஸிங் ரூமில் காவ்யா மாறன் பேசிய காணொளி வெளியாகியுள்ளது.

IPL 17வது சீசன் தொடங்கியதில் இருந்தே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு வந்த அந்த அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் படுதோல்வி அடைந்தது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா ஆல்ரவுண்ட் ஆட்டத்தின் மூலம் பட்டம் வென்றது.

சன்ரைசர்ஸ் அணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது. போட்டி முடிந்ததும் சன்ரைசர்ஸ் அணியின் இணை உரிமையாளர் காவ்யா மாறன் கண்ணீர் விட்டார்.

இருப்பினும், துயரத்தில் இருந்த வீரர்களுக்கு காவ்யா ஆறுதல் கூறி அனைவரது மனதையும் வென்றார்.

போட்டி முடிந்ததும், டிரஸ்ஸிங் அறைக்குள் சென்ற காவ்யா மாறன், சோகமடைந்த வீரர்களை உற்சாகப்படுத்த முயன்றார்.

'உண்மையிலேயே எங்களைப் பெருமைப்படுத்தியிருக்கிறீர்கள். டி20 கிரிக்கெட் விளையாடும் முறையை மறுவரையறை செய்துள்ளீர்கள். ஐபிஎல்லில் அனைவரும் சன்ரைசர்ஸ் அணியை பற்றி பேசுகிறார்கள். ஆனால், இன்று நம்முடையது அல்ல. ஆனால் நீங்கள் போட்டியில் சிறப்பாக விளையாடினீர்கள்.

அனைவருக்கும் நன்றி.

கடந்த சீசனில் நாங்கள் கடைசி இடத்தில் இருந்தபோதிலும், இந்த சீசனில் எங்கள் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்திற்கு வந்துள்ளனர்., இது உங்களால்தான்.

KKR ஐபிஎல் சாம்பியன் ஆனால் அனைவரும் சன்ரைசர்ஸ் பற்றி பேசுகிறார்கள். 

இனிமேல் எல்லோரும் சன்ரைசர்ஸ் பற்றி பேசுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஏனென்றால், இந்தப் போட்டியில் நாம் விளையாடிய ஆட்டம் அதுதான்.

யாரும் மனம் தளர வேண்டாம். இறுதிப் போட்டி வரவு வந்தோம். இது மற்ற போட்டிகளைப் போன்றதே. இன்று மற்ற அணிகள் நம் ஆட்டத்தை பார்க்கின்றன. அனைவருக்கும் நன்றி. சீக்கிரம் மீண்டும் சந்திப்போம்' என்ற காவ்யா மாறன் பேசினார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்