Paristamil Navigation Paristamil advert login

காதலர்களுக்கான செயலியை பயன்படுத்தி - பாலியல் தாக்குதல்கள், பணம் பறிப்பு.. எட்டு பேர் கைது!

காதலர்களுக்கான செயலியை பயன்படுத்தி - பாலியல் தாக்குதல்கள், பணம் பறிப்பு.. எட்டு பேர் கைது!

28 வைகாசி 2024 செவ்வாய் 17:53 | பார்வைகள் : 3644


காதலர்கள் பயன்படுத்தும் Dating செயலிகளை பயன்படுத்தி, பாலியல் தாக்குதல்கள், கொள்ளை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட எட்டுப் பேரும் சிறுவர்கள் எனவும், 14 தொடக்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Aulnay-sous-Bois (Seine-Saint-Denis) நகரை தலைமையிடமாகக் கொண்ட இவர்கள், குறித்த செயலிகளுக்குப் பின்னால், போலி கணக்குகளுடன் செயற்பட்டு தூண்டில் போட்டுள்ளனர்.

குறிப்பாக ஓரினச் சேர்க்கையாளர்களை எளிதில் நம்ப வைத்து, அவர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்கின்றனர். அதன் பின்னர், அவர்களை தனியே வரவழைத்து தாக்குதல் மேற்கொண்டு அவர்களிடம் இருந்து பணம் பறிக்கின்றனர். சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகியுள்ளனர்.

முதலாவது சம்பவம் ஏப்ரல் 15 ஆம் திகதி Aulnay-sous-Bois நகரில் இடம்பெற்றுள்ளது. 27 வயதுடைய ஒருவர் பத்து சிறுவர்களால் தாக்கப்பட்டுள்ளார். அவர் வழக்கு பதிவு செய்ததை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

அதை அடுத்தே கடந்த வாரத்தில் குறித்த எட்டுப் பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்