ஆப்பிரிக்காவில் படகு கவிழ்ந்து விபத்து - 63 பேர் பலி

17 ஆவணி 2023 வியாழன் 09:01 | பார்வைகள் : 11019
மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகல் நாட்டைச் சேர்ந்த அகதிகள் ஸ்பெயினின் கேனரி தீவுகள் நோக்கி கப்பலில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 63 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குறித்த படகு கேப் வெர்டே தீவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென படகு கவிழ்ந்தது.
இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவலறிந்து மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அவர்கள் 56 உடல்களை மீட்டனர். மேலும் 7 பேரின் உடல்களை தேடி வருகின்றனர் என ஐ.நா.வின் சர்வதேச அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1