சிறுவர்களின் வன்முறைத் தாக்குதல் - காவற்துறை வாகனங்கள் தீக்கிரை!!

28 சித்திரை 2024 ஞாயிறு 13:53 | பார்வைகள் : 16775
நேற்று ஒரு 14 வயதுச்சிறுவனைத் கடும் வன்முறையுடன் தாக்கிய, ஐந்து 16 வயதிற்குட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Rhône இலுள்ள ஜிவோர்(Givors) நகரில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த, லியோனின் புறநகரப்பகுதியில் தொடர் வன்முறைகள் அதிகரித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இந்த 14 வயதுடைய சிறுவனைத் தாக்கிய, 12 முதல் 16 வயதுடைய ஐவர் கைது செய்யப்பட்டு, இதில் நால்வர் மட்டும் காவற்துறைத் தடுப்பில் வைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் 18 மணியளவில் நடந்துள்ளது.
இவர்களைக் காவலில் வைத்திருந்த ஜிவோர் காவல் நிலையம் 22 மணியளவில் 30 இற்கும் மேற்பட்ட இளைஞர்களால் தாக்குதலிற்கு உள்ளானது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து காவற்துறையினரின் இரண்டு வாகனங்களும் தீக்கிரையானது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1