Essonne : ஆயுததாரி மீது ஜொந்தாமினர் துப்பாக்கிச்சூடு!!

29 சித்திரை 2024 திங்கள் 14:32 | பார்வைகள் : 15360
ஜொந்தாம் வீரர்களை தாக்க முற்பட்ட ஆயுதராரி ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளார். Limours (Essonne) நகரில் இச்சம்பவம் ஏப்ரல் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
30 வயதுடைய ஒருவர் கைகளில் கத்தி ஒன்றை வைத்துக்கொண்டு குடும்ப அங்கத்தவர்களை அச்சுறுத்துவதாக ஜொந்தாமினருக்கு கிடைத்த தகவலை அடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
குறித்த நபர் மனநலம் குன்றியவர் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அவர், திடீரென ஜொந்தாம் வீரர்களை தாக்க முற்பட்டுள்ளார். அவர் ஆயுதத்தை கீழிறக்க மறுத்துள்ளார். அதையடுத்து, ஜொந்தாமினர் அவரின் கால்களில் சுட்டு வீழ்த்தி அவரைக் கைது செய்தனர்.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1