Paristamil Navigation Paristamil advert login

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் A13 நெடுஞ்சாலை மே 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது!

பல்வேறு கட்டுப்பாடுகளுடன் A13 நெடுஞ்சாலை மே 11 ஆம் திகதி திறக்கப்படுகிறது!

29 சித்திரை 2024 திங்கள் 18:43 | பார்வைகள் : 9836


A13 நெடுஞ்சாலை கடந்த ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளமை அறிந்ததே. படிப்படியாக பல்வேறு நிபந்தனைகளுடன் அது திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 11 ஆம் திகதி சனிக்கிழமை முதல் A13 நெடுஞ்சாலையில் சிறிய எடைகொண்ட வாகனங்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பார ஊர்திகள், நீண்ட வாகனங்கள் போன்றவை அனுமதிக்கப்படவில்லை.

கிட்டத்தட்ட 15 மீற்றர் நீளம் கொண்ட பாரிய வெடிப்பு கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, வீதி மூடப்பட்டு செப்பனிடப்பட்டு வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்