Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வங்கிகளை கண்காணிக்கும் மத்திய வங்கி?

இலங்கையில் வங்கிகளை கண்காணிக்கும் மத்திய வங்கி?

18 ஆவணி 2023 வெள்ளி 11:46 | பார்வைகள் : 9812


இலங்கையில் வங்கிகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனை தெரிவித்துள்ளார்.

திறந்த வட்டி விகிதங்களைக் குறைக்கும் போது வங்கி முறைமையும் பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்