என் பேரழகு பெண்மயிலே

3 வைகாசி 2024 வெள்ளி 09:38 | பார்வைகள் : 6121
என் பெண்மயிலே...
மாலைநேர பொழுதில்
மலையடிவாரத்தில்...
அழகு மயில்கள் தோகை
விரித்தாடும் நேரத்தில்...
என் பெண்மயிலே நீ
ஏன் அங்கு சென்றாய்...
நீயும்
தோகைவிரித்தாட சென்றாயோ...
காய்ந்து கிடக்கும் பூமியில்
உன் பாதம் பட்டால்...
மண்ணில் புதைந்த விதைகள்
எல்லாம் புத்துயிர் பெறுமடி...
வளர்ந்து
நிற்கும் தென்னையும்...
பாலைவிடும்
உன் பாதம் பட்டால்...
மலைப்பாறைகளிலும்
நீர் சுரக்கும்...
என்னுயிரே உன்
பார்வை பட்டால்...
வயலில்
நடைபோடும் உன்னோடு...
வாழ்க்கை
நடைபோட காத்திருக்கிறேன்...
உன் இதழ்கள் விரித்து
நீயும் சம்மதம் சொன்னால்...
வாழைமரம் கட்டுவேன்
என் வீட்டு வாசலில்...
என் விழிகளை நேருக்குநேர்
சந்தித்து பதில் சொல்லடி...
அழகு மயிலாடு நடைபோடும்
பேரழகு என் பெண்மயிலே.....
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1