Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேல் - லெபனான் இடையே பதற்றம் - ஹிஸ்புல்லா தளபதி பலி

இஸ்ரேல் - லெபனான் இடையே பதற்றம் - ஹிஸ்புல்லா தளபதி பலி

13 ஆனி 2024 வியாழன் 08:18 | பார்வைகள் : 1674


லெபனான் மீது இஸ்ரேல் விமானப்படை 12-06-2024 இரவு அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெற்கு லெபனானின் ஜொலியா என்ற கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்தே இந்த தாக்குதல் நாடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதலில் ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவின் தளபதி அபுதலிப் உட்பட 4  பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதல் நடத்தியுள்ளது.

இத்தாக்குதலில் இஸ்ரேலின் சில பகுதிகளில் தீ விபத்து சம்பவங்களும் ஏற்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேல் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், இஸ்ரேல் - லெபனான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்