Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. இருவர் கைது..!

பரிஸ் : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி.. இருவர் கைது..!

17 ஆனி 2024 திங்கள் 13:16 | பார்வைகள் : 1903


நேற்று ஜூன் 16, ஞாயிற்றுக்கிழமை இரவு பரிசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

14 ஆம் வட்டாரத்தில் உள்ள Porte de Montrouge பகுதியில் இத்துப்பாக்கிச்சூடு நள்ளிரவு 1 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் அழைக்கப்பட்டபோது, சம்பவ இடத்தில் இருந்து பல துப்பாக்கிச்சன்னங்கள் மீட்கப்பட்டதாகவும், காயமடைந்த நபர் Clamart (Hauts-de-Seine) நகரில் உள்ள Antoine-Béclère மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்ததாகவும், விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், Malakoff (Hauts-de-Seine) பகுதியில் இருவரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்