Paristamil Navigation Paristamil advert login

யாழில் இளைஞன் அடித்துக்கொலை - தலைமறைவான இருவர்

யாழில் இளைஞன் அடித்துக்கொலை - தலைமறைவான இருவர்

20 ஆனி 2024 வியாழன் 09:08 | பார்வைகள் : 1672


யாழ்ப்பாணம் - நெடுந்தீவு ஏழாம் வட்டார பகுதியில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நெடுந்தீவு 07 வட்டாரத்தைச் சமக்கீன் தேவராஜ் அருள்ராஜ் என்ற 23 வயதானவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கிடையே காணப்பட்ட முற்பகை காரணமாக நேற்றைய தினம் இரவு மது போதையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அதன் பின்னர் குறித்த  கொலை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நெடுந்தீவு வைத்தியசாலையில், ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கொலையுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர்  தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்