Paristamil Navigation Paristamil advert login

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கொலைகள் - பாரிய வீழ்ச்சி!!

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான கொலைகள் - பாரிய வீழ்ச்சி!!

20 ஆனி 2024 வியாழன் 13:52 | பார்வைகள் : 3121


போதைப்பொருள் கடத்தல்காரர்களிடையே இடம்பெறும் படுகொலைகள் கடந்தவருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் வீழ்ச்சியடைந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையின் கூடாரமாக விளங்கும் மார்செ (Marseille) நகரிலேயே இந்த எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வருடத்தின் முதல் ஆறு மாதத்தில் மார்செயில் 5 பேர் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். அனைத்து கொலைகளும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகும்.

அதேவேளை, சென்ற வருடம் முதல் ஆறு மாதங்களில் 23 பேர் கொல்லப்பட்டிருந்தனர். அதனோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் 70% சதவீத வீழ்ச்சியாகும் 

அதேவேளை, கொலை முயற்சியும் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த ஆறு மாதத்தில் 19 முயற்சிகளும், சென்ற ஆண்டு முதல் ஆறு மாதங்களில் 46 முயற்சிகளும் பதிவாகியிருந்தன.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்