Paristamil Navigation Paristamil advert login

பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடு

பெண்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் நாடு

28 ஆவணி 2023 திங்கள் 11:11 | பார்வைகள் : 8355


ஆப்கானிஸ்தானின் ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் பெண்களுக்காக அதிக கட்டுப்பாட்டுகளை விதித்து வருகின்றார்கள்.

பெண்களுக்கு தேவையான அத்தியவசிய விடயங்களுக்கும் கட்டுப்பாடுகள் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது உயர்நிலை கல்வி, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் செய்ய பெண்களுக்கு தடைவிதித்தது.  

அந்தவகையில் தேசிய பூங்காக்களுக்கு பெண்கள் செல்லக்கூடாது என்று தலிபான்கள் இன்னுமொரு தடையை விதித்துள்ளது.

இதுகுறித்து தாலிபான் நல்லொழுக்கம் துறை துணை மந்திரி காலித் ஹனாபி ஒரு கருத்தை முன்வைத்துள்ளார்.

கூறும்போது, பூங்காவுக்கு செல்லும்போது பெண்கள் ஹிஜாப் அணிவதில் சரியான முறையை கடைபிடிப்பதில்லை.

பெண்கள் பூங்காவுக்கு செல்வதற்கான விதிமுறைகள் தயாராகி வருகின்றன.

அதுவரை பெண்கள் தேசிய பூங்காவிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்