Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் கேளிக்கை விடுதியின்  அருகே  மர்ம கும்பலால் பரபரப்பு !

பிரேசிலில் கேளிக்கை விடுதியின்  அருகே  மர்ம கும்பலால் பரபரப்பு !

22 ஆனி 2024 சனி 04:48 | பார்வைகள் : 1264


பிரேசிலில் சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரின் மையப்பகுதியில் வைத்து கும்பல் ஒன்று நடாத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சீரா மாகாணம் விகோசா டு சீரா நகரில் உள்ள கேளிக்கை விடுதி அருகே 21-06-2024  அதிகாலை சிலர் நின்று கொண்டிருந்தனர். 

இதன்போது, அங்கு கார், பைக்குகளில் 10க்கும் மேற்பட்டோர் ஆயுதங்களுடன் கும்பலாக வந்தவர்கள் கேளிக்கை விடுதி அருகே நின்றவர்களை துப்பாக்கி முனையில் சிறை பிடித்தனர்.


இதனையடுத்து, அவர்கள் அனைவரையும் நகரின் மையப்பகுதியில் உள்ள தூண் அருகே அழைத்து சென்று மண்டியிட வைத்தனர்.

பின்னர், அந்த கும்பல் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு ஒவ்வொருவராக சுட்டனர். ஆண்கள், பெண்கள் என மொத்தம் 7 பேரை அந்த கும்பல் சுட்டுக்கொன்றது அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், இந்த துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டது யார்? துப்பாக்கி சூட்டிற்கான காரணம் என்ன? போதைப்பொருள் கடத்தல் கும்பல் மோதலா? இரு தரப்பு மோதலால் இந்த துப்பாக்கி சூடு நடைபெற்றதா? உள்பட பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்