உதைபந்தாட்ட வீரர் Adrien Rabiot வீட்டில் கொள்ளை..!!

24 ஆனி 2024 திங்கள் 14:46 | பார்வைகள் : 14003
பிரெஞ்சு உதைபந்தாட்ட வீரர் Adrien Rabiot வீட்டில் கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Saint-Germain-en-Laye (Yvelines) நகரில் உள்ள அவரது தோட்ட வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணிக்கு கொள்ளையர்கள் உள் நுழைந்துள்ளனர். அவர்கள் அங்குள்ள €30,000 யூரோக்கள் பெறுமதியுள்ள தங்கக்கட்டி ஒன்றையும், €10,000 யூரோக்கள் பணத்தினையும் திருடிக்கொண்டு தப்பிச் சென்றனர்.
விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், உடனடியாகவே கொள்ளையர்களை அடையாளம் கண்டுபிடித்தனர்.
பரிஸ் 12, 13 மற்றும் 20 ஆம் வட்டாரங்களில் வைத்து ஐவரைக் கைது செய்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025