Paristamil Navigation Paristamil advert login

தவறாய்ப்போன பிரபல ஜோதிடரின் கணிப்புகள்: ஒரு சுவாரஸ்ய தகவல்

தவறாய்ப்போன பிரபல ஜோதிடரின் கணிப்புகள்: ஒரு சுவாரஸ்ய தகவல்

26 ஆனி 2024 புதன் 08:19 | பார்வைகள் : 169


பிரான்சில் பிறந்த ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் எழுதிய புத்தகம் 'Les Propheties'. அவரது உண்மையான பெயர் Michel de Nostredame என்பதாகும்.

1555ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த புத்தகத்தில், எதிர்காலத்தில் என்னென்ன நடக்கும் என ஏராளமான விடயங்களை கணித்து எழுதி வைத்திருக்கிறார் நாஸ்ட்ரடாமஸ்.

நாஸ்ட்ரடாமஸின் புத்தகம் வெளியாகி 450 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இன்னமும் அவர் கணித்துள்ள விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இதற்கிடையில், இந்திய நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் குஷால் குமார் என்பவர், இம்மாதம், அதாவது ஜூன் மாதம் 14ஆம் திகதி மூன்றாம் உலகப்போர் துவங்கும் என கணித்து, அப்படி எதுவும் நடக்காமல் போனது நினைவிருக்கலாம்.

ஆக, இப்படி எதிர்காலத்தைக் குறித்து கணிப்பவர்களின் கணிப்புகள் சில தவறாகவும் போயுள்ளன. அப்படி நாஸ்ட்ரடாமஸின் கணிப்புகளில் தவறாய்ப்போன சிலவற்றை இங்கு காணலாம்.

பலர், நாஸ்ட்ரடாமஸ் உலகின் பயங்கரமான தீவிரவாத தாக்குதலான இரட்டைக் கோபுர தாக்குதல் குறித்து சரியாக கணித்ததாகக் கூறுகிறார்கள். ஆனால், அவர் கூறியுள்ளதைப் பார்த்தால், அவர் அந்த தாக்குதலைக் குறித்து பேசவில்லை என்பதை அறியலாம்.

எரிமலை தீ பூமியின் மத்தியிலிருந்து எழுந்து புதிய நகரத்தைச் சுற்றிலும் அதிர்வுகளை ஏற்படுத்தும், இரண்டு பெரிய பாறைகள் நீண்ட காலத்துக்கு போரில் ஈடுபடும், பிறகு Arethusa ஒரு புதிய நதியை சிவப்பாக்கும் என்று குறிப்பிட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ்.

பலரும், Arethusa என்பது அமெரிக்காவைக் குறிப்பதாக கருதுகிறார்கள். ஆனால், கூகுளில் தேடினால் Arethusa என்பது கிரேக்க பாரம்பரியத்தில் கூறப்பட்டுள்ள ஒரு பெண் தெய்வம் என்பது தெரியவரும்.


ஆக, நாஸ்ட்ரடாமஸ் அமெரிக்காவைக் குறித்து பேசவில்லை என்பதும், அவர் இரட்டைக் கோபுர தாக்குதலைக் கணித்ததாக கூறப்படுவதும் தவறு என்பது தெளிவாகிறது.

1999ஆம் ஆண்டு, ஏழாவது மாதத்தில், வானிலிருந்து பயங்கர மன்னன் ஒருவன் இறங்கிவருவான் என்றும், அவன் Mongols மன்னன் ஒருவனுக்கு உயிரளிப்பான் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கூறியிருந்தார்.

ஆனால், 1999 வந்தும் விட்டது, போயும் விட்டது, எந்த பயங்கர மன்னனும் வானத்திலிருந்து இறங்கிவரவில்லையே! ஆக, நாஸ்ட்ரடாமஸின் அந்த கணிப்பும் தவறாகிவிட்டது.

நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு ஒன்று, செவ்வாயும் விண்மீன் கூட்டமும் இணையும், மிகப்பெரிய போர் ஒன்று உருவாகும், பின்னர் புதிய மன்னர் ஒருவர் பதவியேற்பார், அவர் நீண்ட காலத்துக்கு பூமிக்கு அமைதியைக் கொண்டுவருவார் என்று கூறுகிறது.

ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை, உலகத்துக்கு அமைதி கிடைக்கவும் இல்லை, ஆண்டும் 2024ஆகிவிட்டது! ஆக, நாஸ்ட்ரடாமஸின் அந்த கணிப்பும் தவறாகிவிட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்