Paristamil Navigation Paristamil advert login

யாழில் தாய் பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

யாழில் தாய் பால் புரைக்கேறி குழந்தை உயிரிழப்பு

27 ஆனி 2024 வியாழன் 11:02 | பார்வைகள் : 377


யாழ்ப்பாணம், இணுவில் கிழக்கு பகுதியில், பிறந்து. 40 நாட்களான பெண் குழந்தையொன்று பால் புரைக்கேறியதில் உயிரிழந்துள்ள சம்பவம் புதன்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

இணுவில் பிரதேசத்தை சேர்ந்த தாயொருவர் தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்து படுக்கையில் வைத்துள்ளார் . சிறிது நேரத்தின் பின்னர் குழந்தை அசைவற்றுக் கிடப்பதனை அவதானித்த பெற்றோர் மகளை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர் .

அதன்போது , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

குழந்தையின் மரணம் தொடர்பில்  இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில் பால் புரைக்கேறியமையினாலேயே மரணம் சம்பவித்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்