Paristamil Navigation Paristamil advert login

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த கதி

யாழில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞனுக்கு நேர்ந்த கதி

29 ஆவணி 2023 செவ்வாய் 12:48 | பார்வைகள் : 3600


யாழ்ப்பாணம் - ஆனைக்கோட்டை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தார்.

திடீர் சுகயீனம் காரணமாக அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அவருக்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையின் போது, கிருமி தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை கண்டறியப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்தவர் ஊசியின் மூலம் போதைப்பொருளை உட்செலுத்திக் கொண்டுள்ளமை பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞன் ஒருவர் கிருமி தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்