Paristamil Navigation Paristamil advert login

 ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வடகொரியா... எங்கு தெரியுமா..?

 ராட்சத பலூன்களில் குப்பைகளை அனுப்பிய வடகொரியா... எங்கு தெரியுமா..?

31 வைகாசி 2024 வெள்ளி 09:18 | பார்வைகள் : 2665


ராட்சத பலூன்கள் மூலம் தென்கொரியாவுக்கு , வடகொரியா குப்பைகளை அனுப்பிவைத்துள்ளதாக தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராட்சத பலூன் பையில் குப்பைகள், பிளாஸ்டிக் பாட்டில், பேட்டரிகள், ஷூ பகுதிகள், சாணம் இருந்தாக அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளது.

வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக தெரிவித்த அதிகாரிகள் , தென்கொரிய மக்களுக்கு எதிராக தீவிரமான பாதுகாப்பு மிரட்டல் எனவும் தென்கொரிய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற மற்றும் மிகவும் தரம்தாழ்ந்த செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கடுமையாக எச்சரிக்கிறோம் எனவும் தென்கொரியா தெரிவித்தள்ளது.

அதேசமயம் எல்லை அருகில் அமைந்துள்ள ஜியோங்க்கி, கங்வோன் மாகாணத்தில் உள்ள உள்ளூர் அரசு நிர்வாகிகள், அடையாளம் தெரியாத பொருட்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் வெளியில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

அதோடு வடகொரியா அனுப்பிய பொருட்கள் வீடுகள், விமான நிலையங்கள் மற்றும் சாலைகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

கொரிய தீபகற்பத்தில் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி தென்கொரியாவை அச்சுறுத்தி வருகிறது. அமெரிக்காவுடன் இணைந்து போர் ஒத்திகை மேற்கொள்ளும்போது, இவ்வாறு ஏவுகணைகளை செலுத்தி தென்கொரியாவின் எச்சரிக்கை விடுத்து வருவது வழக்கம்.


இவ்வாறான நிலையில் தற்போது ஏராளமான ராட்சத பலூன்களை தென்கொரியா எல்லைக்குள் இரண்டு பலூன்களை ஒன்றாக இணைந்து அதில் குப்பைகளை கட்டி அனுப்பி வைத்துள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்